மதுக் கடைகளுக்கு நாளை விடுமுறை
தொழிலாளர் தினத்தையொட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகளுக்கும் செவ்வாய்க்கிழமை (மே 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் தினத்தையொட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகளுக்கும் செவ்வாய்க்கிழமை (மே 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தொழிலாளர் தினத்தையொட்டி அரசு மதுபானக் கடைகளுக்கும், அத்துடன் இணைக்கப்பட்டுள்ள மதுக் கூடங்கள் ஆகியவற்றுக்கு செவ்வாய்க்கிழமை (மே 1) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விதிமுறைகளுக்கு மாறாக மே தினத்தில் மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.