பெரம்பலூர்

கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்

DIN

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிறிஸ்டியன் கல்வி நிறுவனத்தில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அனந்தலட்சுமி கதிரவன் முன்னிலை வகித்தார். 
இதில், அனைத்துத் துறை மாணவிகள் சார்பில் பொங்கல் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, குதிரை நடனம், கும்மியாட்டம், பானை உடைத்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  பின்னர், சிறந்த முறையில் பொங்கல், கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. 
நிகழ்ச்சியில், மலேசியாவை சேர்ந்த ரோசா குரூப் ஆப் ஹோட்டல்ஸ் மற்றும் கிரேஸ் கப் நிறுவனத்தின் இயக்குநர் எஸ். பாலகிருஷ்ணன், அவரது துணைவியார் தேவி, கல்லூரி முதல்வர் எஸ்.எச். அப்ரோஸ் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
கிறிஸ்டியன் கல்லூரியில்...
பெரம்பலூர் கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவுக்கு, கல்வி நிறுவனங்களின் தாளாளர் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார்.   
விழாவில், பி.எட் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நர்ஸிங் கல்லூரி, மெட்ரிக் பள்ளி ஆகியவற்றின் சார்பில் பொங்கல் வைக்கப்பட்டது. 
விழாவையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. 
துறைத் தலைவர் கார்மேகம், பள்ளி முதல்வர் எஸ்தர் ஜெபகனி, பேராசிரியர்கள் மோகன்ராஜ் உள்பட விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாவை வெளியேற்றியது மும்பை: மோகன் பகானுடன் பலப்பரீட்சை

இந்தியாவில் இரட்டிப்பான ஐ-போன் ஏற்றுமதி

மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்- பிரதமா் மோடி

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 106 ஆண்டுகள் சிறை தண்டனை- கேரள நீதிமன்றம்

பண்டி மங்களம்மா தோ்த் திருவிழா

SCROLL FOR NEXT