பெரம்பலூர்

சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

பணி மாறுதல் உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி சாலைப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
துறைமங்கலத்தில் கோட்டப் பொறியாளர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்ள் சங்கத்தின் வட்டத் தலைவர்ஆர். முத்துசாமி தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் என். அம்மாசி, துணைத் தலைவர்கள் ராமநாயகம், கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் கே. மணிவேல் கோரிக்கைகளை விளக்கி பேசினார். 
 தொழிற்சங்க விரோத போக்கை கைவிடுவது, பழிவாங்கும் வகையில் போடப்பட்ட பணி மாறுதல் உத்தரவை திரும்பப் பெற  வலியுறுத்தி முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.  மாவட்ட தலைவர் பி.சுப்ரமணியன், அரசு ஊழியர் சங்க நிர்வாகி பி.தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT