பணி மாறுதல் உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி சாலைப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
துறைமங்கலத்தில் கோட்டப் பொறியாளர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்ள் சங்கத்தின் வட்டத் தலைவர்ஆர். முத்துசாமி தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் என். அம்மாசி, துணைத் தலைவர்கள் ராமநாயகம், கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் கே. மணிவேல் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
தொழிற்சங்க விரோத போக்கை கைவிடுவது, பழிவாங்கும் வகையில் போடப்பட்ட பணி மாறுதல் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட தலைவர் பி.சுப்ரமணியன், அரசு ஊழியர் சங்க நிர்வாகி பி.தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.