பெரம்பலூர் மாவட்ட செயலராக எஸ்.பி. சண்முகதேவன், இணைச் செயலராக பி. ரவி, துணைச் செயலர்களாக எஸ். மதியழகன், ஏ.எஸ். முகமது பாரூக், வி. மாரிமுத்து, செயற்குழு உறுப்பினர்களாக சங்கரன், ராஜேந்திரன், ஸ்ரீராம் ஆதித்யா, விஜயகுமார், பாபுவாணன், இளைஞர் அணி செயலராக தீனதயாளன், மகளிர் அணி செயலராக மேனகா மணிகாந்த், தகவல் தொழில்நுட்ப அணி செயலராக கார்த்திகேயன், வழக்குரைஞர் அணி செயலராக பாண்டித்துரை, விவசாய அணி செயலராக கார்த்திகேயன், மருத்துவர் அணி செயலராக டாக்டர் பிரவீன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் நகர செயலராக எஸ். முத்துக்குமார், இணைச் செயலராக சி. செந்தில்குமார், துணைச் செயலர்களாக கண்ணன், பழனிச்சாமி ஆகியோரும், பெரம்பலூர் ஒன்றிய செயலராக செல்வக்குமார், இணைச் செயலராக ஆனந்தன், துணைச் செயலராக கண்ணன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேப்பந்தட்டை ஒன்றிய செயலராக பாத்திரம் சிவா, இணைச் செயலராக வினோத்குமார், துணைச் செயலர்களாக முகமது ராசித், ராஜபூபதி, தர்ம துரை ஆகியோரும், ஆலத்தூர் ஒன்றிய செயலராக சரவணன், இணைச்செயலராக மணிவண்ணன், துணைச் செயலர்களாக அன்புச்செழியன், கணேசன், முருகப்பாண்டியன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேப்பூர் ஒன்றிய செயலராக இளங்கோ, இணைச் செயலராக காமராஜ், துணைச் செயலர்களாக மாயவேல், செல்வம் ஆகியோரும், செந்துறை ஒன்றிய செயலராக புகழேந்தி, இணைச் செயலராக பழனிச்சாமி, துணைச் செயலர்களாக முருகையன், கருப்புசாமி, வெங்கடேசன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.