முகப்பு
பெரம்பலூர்

புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்கக்கோரி மனு

புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க வேண்டுமென பழைய அங்கனூர் கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியர் எம்.விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர்.

Updated On : 15 மே, 2018 at 4:15 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க வேண்டுமென பழைய அங்கனூர் கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியர் எம்.விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள பழைய அங்கனூர் கிராமத்துக்கு சிவராமபுரம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆழ்துளை கிணறு தண்ணீரை 3 கிராம மக்கள் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் தற்போது வறட்சி ஏற்பட்டுள்ளதால் எங்களது கிராமத்துக்கு புதிதாக தனி ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.