அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படி வழங்கிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க தலைமை நிலையச் செயலர் கே. மணி வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் விலைவாசி உயர்வுக்கேற்ப, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 3 சதவிகித அகவிலைப்படி உயர்வை வழங்கியுள்ளது. இதன்மூலம், மத்திய அரசு ஊழியர்கள் 12 சதவீதம் அகவிலைப்படி பெறுகிறார்கள். கடந்த காலங்களில் தேர்தல் விதிமுறைகள் இருந்தபோதும், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.
எனவே, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியதுபோல, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் 3 சதவிகித அகவிலைப்படியை வழங்க ஆவண செய்திட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.