பெரம்பலூர்

சாலை விபத்தில் கார் ஓட்டுநர் சாவு

DIN

பெரம்பலூர் அருகே டேங்கர் லாரி மோதியதில்  மோட்டார் சைக்கிளில் சென்ற கார் ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகேயுள்ள அடைக்கம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லதுரை மகன் சரவணன் (35). கார் ஓட்டுநர். இவர் செவ்வாய்க்கிழமை மாலை பெரம்பலூரிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தார். பெரம்பலூர்- துறையூர் சாலையில் களரம்பட்டி அருகே சென்றபோது, துறையூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி வந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரவணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சரவணனின் உடலை பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT