பெரம்பலூர்

கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து சாவு

DIN

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே கூலி வேலை கிடைக்காததால் மனமுடைந்த கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், கொளக்காநத்தம் கிராமம், பள்ளிக்கூட தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் சரவணன் (42). கட்டடத் தொழிலாளியான இவருக்கு கடந்த15 நாள்களுக்கும் மேலாக வேலை கிடைக்கவில்லையாம். இதனால் மனமுடைந்த சரவணன் செவ்வாய்க்கிழமை காலை விஷம் குடித்து மயங்கி கிடந்தாா். இதையறிந்த அவரது உறவினா்கள் அவரை பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சரவணன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT