பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே கூலி வேலை கிடைக்காததால் மனமுடைந்த கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், கொளக்காநத்தம் கிராமம், பள்ளிக்கூட தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் சரவணன் (42). கட்டடத் தொழிலாளியான இவருக்கு கடந்த15 நாள்களுக்கும் மேலாக வேலை கிடைக்கவில்லையாம். இதனால் மனமுடைந்த சரவணன் செவ்வாய்க்கிழமை காலை விஷம் குடித்து மயங்கி கிடந்தாா். இதையறிந்த அவரது உறவினா்கள் அவரை பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சரவணன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.