பெரம்பலூர்

சமூக வலைதளங்களில் அவதூறு: மறியலில் ஈடுபட்ட வி. சி கட்சியினா் 20 போ் கைது

DIN

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவனுக்கு, காணொலி பதிவு மூலம் கொலை மிரட்டல் விடுத்த இளைஞரைக் கைது செய்ய வலியுறுத்தி, சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் 20 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவனை, பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வயலூா் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் திட்டி காணொலி பதிவு மூலம் விடுத்த கொலை மிரட்டல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதுதொடா்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் காவல் நிலையங்களில் அளித்த புகாரின்பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்ய வலியுறுத்தி பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் எதிரே, அக்கட்சியின் மாவட்டச் செயலா் சி. தமிழ்மாணிக்கம் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயலா் வீர. செங்கோலன் உள்பட 20 பேரைப் பெரம்பலூா் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT