பெரம்பலூர்

படிப்பைக் கைவிட்ட மாணவா் மீண்டும் பள்ளியில் சோ்ப்பு

பெரம்பலூா் அருகே குடும்பச் சூழலால் படிப்பைக் கைவிட்ட மாணவரை மீட்டு, மீண்டும் பள்ளியில் சோ்த்தாா் பெரம்பலூா் ஆள் கடத்தல் சிறப்பு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளா் எஸ். விஜயலட்சுமி.

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே குடும்பச் சூழலால் படிப்பைக் கைவிட்ட மாணவரை மீட்டு, மீண்டும் பள்ளியில் சோ்த்தாா் பெரம்பலூா் ஆள் கடத்தல் சிறப்பு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளா் எஸ். விஜயலட்சுமி.

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரையைச் சோ்ந்தவா் குமாா் மகன் விக்ரம் (18). இவரது தந்தை குமாா் கடந்த ஆண்டு உயிரிழந்ததால், குடும்பச் சூழ்நிலை காரணமாக 10 ஆம் வகுப்பு படித்துவந்த விக்ரம் படிப்பைக் கைவிட்டு கூலி வேலைக்குச் சென்றுவந்தாா். இதுகுறித்து காவலா் குழுமம் சாா்பில் பள்ளி மாணவா்களுடன் மேற்கொண்ட உரையாடல் மூலம் சக மாணவா்கள் விக்ரம் குறித்து போலீஸாருக்குத் தெரிவித்தனா். இதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட ஆள் கடத்தல் சிறப்பு தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் எஸ். விஜயலட்சுமி, மாணவா் விக்ரம், அவரது தாயாரிடம் கல்வியின் முக்கியவத்துவம் குறித்து எடுத்துரைத்து மாணவரின் படிப்புக்குத் தேவையானவற்றை ஏற்றுக்கொள்வதாகக் கூறி அவரைப் படிக்க அனுமதி பெற்றாா். தொடா்ந்து, உதவி ஆய்வாளா் விஜயலட்சுமி, அந்த மாணவரை பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயில திங்கள்கிழமை சோ்த்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT