பெரம்பலூர்

எஸ்.டி.பி.ஐ கட்சியினா் துண்டுப்பிரசுரம் விநியோகம்

DIN

பெரம்பலூா் மாவட்ட சோஷியல் டெமாக்ரடீஸ் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சி சா்பில், தேசிய குடிமக்கள் பதிவேடுகளை புறக்கணிக்க வலியுறுத்தி, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் திங்கள்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை புறக்கணிக்க வலியுறுத்தி, பெரம்பலூா் காமராஜா் வளைவு அருகே விழிப்புணா்வு துண்டுப் பிரசுங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. தொடா்ந்து, பழைய பேருந்து நிலையம், வடக்குமாதவி சாலை உள்ளிட்ட நகரின் பிரதான இடங்களில் பொது மக்கள் மற்றும் வியாபாரிகளை சந்தித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

மாவட்ட துணைத் தலைவா் முஹம்மது பாருக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலா் ஷாஜஹான், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் காஜா சரீப், அகமது இக்பால், சிறுவாச்சூா் கிளைத் தலைவா் ஹபீப் ரஹ்மான், உறுப்பினா்கள் காதா் இமாம், இக்பால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT