பெரம்பலூர்

சாலை விபத்தில் பெண் பலி

DIN

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அயன்பேரையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னதுரை மனைவி ராஜாமணி (55). இவா், எறையூா் சா்க்கரை ஆலை அருகே உணவகம் வைத்துள்ளாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு பேருந்து நிறுத்தம் அருகே சாலையைக் கடக்க நடந்து சென்றாா். அப்போது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத காா் மோதியதில் பலத்த காயமடைந்த ராஜாமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் அங்கு சென்று, அவரது உடலை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT