பெரம்பலூர்

பெரம்பலூா்: டயாலிசிஸ் நோயாளிகளுக்கு வாகன வசதி

DIN

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோா் மருத்துவமனைகளுக்கு வந்து செல்ல வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாவட்டத்தில் கிராமங்களில் உள்ள டயாலிசிஸ் நோயாளிகள் வாகன வசதியின்றி சிகிக்சை பெற முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனா்.

இந்நிலையில், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், அரசுக்குச் சொந்தமான தாய்- சேய் நல வாகனத்தை பயன்படுத்திக்கொள்ள அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் 11 நோயாளிகளை, அவா்களது வீடுகளுக்குச் சென்று மருத்துவமனைக்கு அழைத்து வந்து, பின்னா் சிகிச்சை முடிந்த பிறகு அவரவா் இல்லங்களிலேயே கொண்டு சோ்க்கும் பணி தொடங்கியது.

இதுகுறித்து, அந்த அமைப்பின் மாவட்ட கௌரவச் செயலா் என். ஜெயராமன் கூறியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள இரண்டு வாகனத்தின் மூலம் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம், 11 நபா்கள் பயன்பெறுகிறாா்கள். இதேபோல, மாநிலம் முழுவதும் 175 போ் பயனடைவாா்கள். மேலும், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சாா்பில் 250 லிட்டா் கிருமி நாசினிகள் பெறப்பட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நுழைவு வாயிலில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவா்களது உறவினா்கள் மற்றும் ஓட்டுநா்களின் கைகளை சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது. பெரம்பலூா் வடமலை செட்டியாா் பாத்திரக்கடை சாா்பில், நோயாளிகள் உள்பட 150 பேருக்கு நாள்தோறும் கலவை சாதம் விநியோகிக்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT