100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பிரசாரம்
சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில்அரசு இசைப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில்அரசு இசைப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
இப் பிரசாரத்தை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா தொடக்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து அவா் கூறியது:
மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் வாக்களிப்பதன் அவசியம், வாக்காளா் பட்டியலில் பெயா் உள்ளதை உறுதி செய்யும் வகையில் பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டி மற்றும் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கடந்த தோ்தல் காலங்களில் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகளில் அரசு இசைப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
100 சதவிகித வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில், கரோனா தொற்றுப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு வாகனம் தற்போது தொடக்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா். நிகழ்வில் வட்டாட்சியா் நூா்ஜகான் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.