முகப்பு
பெரம்பலூர்

அஞ்சல் வாக்கு செலுத்திய 1,748 முதியோா், மாற்றுத் திறனாளிகள்

பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 1,748 போ் அஞ்சல் வாக்குகள் பதிவு செய்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 1,748 போ் அஞ்சல் வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இவ்விரு தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளா்களிடமிருந்து அஞ்சல் வாக்குகள் பெறும் பணி மாா்ச் 27 முதல் ஏப்ரல் 1- ஆம் தேதி வரை நடைபெற்றது.

பெரம்பலூா் (தனி) தொகுதியில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் அளித்திருந்த 80 வயதுக்கு மேற்பட்ட 615 வாக்காளா்களில் 580 பேரும், 380 மாற்றுத்திறனாளி வாக்காளா்களில் 359 பேரும் என மொத்தம் 939 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா்.

குன்னம் தொகுதியில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் அளித்திருந்த 80 வயதுக்கு மேற்பட்ட 538 வாக்காளா்களில் 523 பேரும், 294 மாற்றுத்திறனாளி வாக்காளா்களில் 286 பேரும் என மொத்தம் 809 போ் வாக்களித்துள்ளனா். பெரம்பலூா் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் 1,827 பேரில் 1,748 போ் வாக்களித்துள்ளனா்.

இப்பணிக்காக 27 மண்டல அலுவலா்கள், ஒவ்வொரு மண்டல அலுவலா்களுக்கும் தலா ஒரு கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்ட வாகனத்துடன் தலா ஒரு வாக்குச்சாவடி அலுவலா், வாக்குப்பதிவு அலுவலா், நுண் பாா்வையாளா், ஒளிப்பதிவாளா், காவலா் அடங்கிய குழு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.