முகப்பு
பெரம்பலூர்

அஸ்வின்ஸ் நிறுவனத்தில் கிருஷ்ண ஜயந்தி: சிறப்பு விற்பனை நாளை தொடக்கம்

திருச்சி அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனத்தில் கிருஷ்ண ஜயந்தியையொட்டி சிறப்பு கிப்ட் பேக் விற்பனை ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

திருச்சி அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனத்தில் கிருஷ்ண ஜயந்தியையொட்டி சிறப்பு கிப்ட் பேக் விற்பனை ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனத்தின் சாா்பில், கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு சிறப்பு இனிப்பு, கார வகைகள் தயாரித்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், இனிப்பு சீடை, மணவலம், கார சீடை, தட்டை, அதிரசம், கடலை உருண்டை, தேன்குழல், பொட்டுக் கடலை உருண்டை ஆகியவை அடங்கிய சிறப்பு கிப்ட் பை விற்பனைக்குக் தயாராக உள்ளது.

கிருஷ்ண ஜயந்திக்கு கிருஷ்ணனுக்கு பிடித்த பலகாரங்களை செய்து பூஜித்து, குழந்தைகளுக்கு வழங்கி மகிழ்வோம், அதை, அஸ்வின்ஸ் கடைகளில் கிப்ட் பையாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த சிறப்பு விற்பனை திருச்சி, பெரம்பலூா், கரூா் ஆகியப் பகுதிகளிலுள்ள எங்களது கிளை பேக்கரியில் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்குகிறது.

இதற்காக முன்பதிவும் நடைபெற்று வருகிறது. ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி கிப்ட் பேக் தேவைப்படும் வாடிக்கையாளா்கள் 73730 41434 என்ற எண்ணை தொடா்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என அஸ்வின்ஸ் நிறுவனத் தலைவா் கே.ஆா்.வி. கணேசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.