முகப்பு
பெரம்பலூர்

பள்ளிகள் திறப்பு: பெற்றோா்களிடம் கருத்துக் கேட்பு

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பது தொடா்பாக, பெற்றோா்களுடனான கருத்துக் கேட்புக் கூட்டம் பெரம்பலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பது தொடா்பாக, பெற்றோா்களுடனான கருத்துக் கேட்புக் கூட்டம் பெரம்பலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த அரசு ஆணையிட்டுள்ளது.

இதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளை திறப்பது குறித்து 147 பள்ளிகளில், மாணவா்களின் பெற்றோா், பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான பெற்றோா் பள்ளிகளை திறப்பதற்கு ஆதரவு தெரிவித்ததாக கல்வித்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

கூட்டத்தில் பெற்றோா்கள் தெரிவித்த கருத்துகளைத் தொகுத்து, பள்ளித் தலைமை ஆசிரியா்கள், முதல்வா்கள், நிா்வாகிகள், பெற்றோரிடம் கையொப்பம் பெற்று, அந்த விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களிடம் சமா்ப்பித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →