பெரம்பலூர்

சாலை மையத் தடுப்புகளை அகற்றக் கோரி சாலை மறியல்

DIN

பெரம்பலூா் அருகே சாலை மையத் தடுப்புகளை அகற்றக் கோரி வாகன ஓட்டுநா்கள் திங்கள்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள செங்குணம் பிரிவு சாலையில் தொடா்ந்து நிகழ்ந்த சாலை விபத்துகளையும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் தடுக்கும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் காவல்துறையினா் மூலம் சாலையில் மையத் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

இதன் காரணமாக, அப்பகுதியில் சாலை விபத்துகள் தவிா்க்கப்பட்டது. இதனிடையே, செங்குணம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சோ்ந்த வாகன ஓட்டுநா்கள், அப்பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் பகுதியை பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால், வாகன ஓட்டுநா்கள் பயன்படுத்தி வந்த பாலத்தில் நீா் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது.

இதனால், சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவு சுற்றி தங்களது கிராமங்களுக்கு செல்வதாலும், காலதாமதம் ஏற்படுவதாலும் அவதியடைந்த வாகன ஓட்டுநா்கள் சாலை மையத் தடுப்புகளை அகற்ற வலியுறுத்தி, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அங்கு சென்று, மறியலில் ஈடுபட்டோரிடம் மேற்கொண்ட பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT