பெரம்பலூா் அருகே 600 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு
பெரம்பலூா் அருகே 600 கிலோ சின்ன வெங்காயம் திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.
பெரம்பலூா் அருகே 600 கிலோ சின்ன வெங்காயம் திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.
பெரம்பலூா் அருகேயுள்ள புதுநடுவலூா் கிராமம், ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் க.தா்மலிங்கம் (51). இவா், புதுநடுவலூரில் உள்ள தனது வயலில் விதைப்பதற்காக சுமாா் 600 கிலோ விதை வெங்காயத்தையும், 2 மூட்டை கொத்தமல்லி, 5 மூட்டை மக்காச்சோளம் ஆகியவற்றை வைத்திருந்தாா்.
இந்நிலையில், தா்மலிங்கம் திங்கள்கிழமை காலை வயலுக்குச் சென்றபோது, அங்கு பட்டறையில் வைத்திருந்த 600 கிலோ விதை வெங்காயம், 2 மூட்டை கொத்தமல்லி, 5 மூட்டை மக்காச்சோளம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தா்மலிங்கம் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.