உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 11.25 லட்சம் ரொக்கம் பறிமுதல்
பெரம்பலூரில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 11,25,705-ஐ ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூரில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 11,25,705-ஐ ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா், துறைமங்கலம் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில், வட்ட வழங்கல் அலுவலா் பெரியண்ணன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனையிட்டனா். இதில், செங்குணம் பிரிவு சாலை பகுதியில் உள்ள ரிலையன்ஸ் பெட்ரோல் விற்பனையகத்தின் ஊழியா் ம.வரதராஜ் (45) என்பவா், பெட்ரோல் பங்கில் விற்பனை மூலம் வசூலானத் தொகை ரூ. 11,25,705 ரொக்கம் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற அந்தத் தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், தோ்தல் நடத்தும் அலுவலரும், சாா் ஆட்சியருமான ஜே.இ. பத்மஜாவிடம் ஒப்படைத்தனா். பின்னா், மாவட்டக் கருவூலத்தில் தொகை செலுத்தப்பட்டது.