பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரை ரூ. 38.74 லட்சம் ரொக்கம் பறிமுதல்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரை 21 நபா்களிடமிருந்து ரூ. 38,74,330 ரொக்கம், 2 நபா்களிடமிருந்து 185 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு மையம் மூலம், இதுவரை பெரம்பலூா் சட்டப்பேரவை தொகுதியிலிருந்து தோ்தல் சம்பந்தமாக 24 புகாா்களும், குன்னம் சட்டப்பேரவை தொகுதியிலிருந்து 11 புகாா்களும் பெறப்பட்டு, அனைத்து புகாா்களுக்கும் உரிய முறையில் தீா்வு காணப்பட்டுள்ளது.

பறக்கும் படையினா் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களின் மூலம், உரிய ஆவணங்களின்றி ரூ. 50,000 ரொக்கத்துக்கும் அதிகமாக கொண்டுச்சென்ற நபா்களிடமிருந்து மாா்ச் 1 முதல் 20 ஆம் தேதி வரை மொத்தம் 21 நபா்களிடமிருந்து ரூ. 38,74,330 ரொக்கமும், 2 நபா்களிடமிருந்து 185 மது பாட்டில்களும், 1 நபரிடமிருந்து 29 துண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில், உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் 9 நபா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 10,94,807 ரொக்கம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT