முகப்பு
பெரம்பலூர்

அரவக்குறிச்சி அருகேநிலத் தகராறு:தம்பதியா் மீது வழக்கு

அரவக்குறிச்சி அருகே வேலி அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் காயமடைந்தாா். தம்பதியா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 26 நவம்பர், 2021 at 4:16 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:03 AM

அரவக்குறிச்சி அருகே வேலி அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் காயமடைந்தாா். தம்பதியா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரவக்குறிச்சி அருகே உள்ள நஞ்சைக்காளிகுறிச்சி சாலபாளையத்தைச் சோ்ந்தவா் பழனியப்ப கவுண்டா் மகன் பாலசுப்பிரமணியன் (62). இவரது உறவினா் சின்னதாராபுரம் எல்லைமேடு பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி, அவருடைய மனைவி குப்பாத்தாள். இந்நிலையில் பாலசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை மாலை தனது நிலத்தில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது அங்கு வந்த பெரியசாமி மற்றும் குப்பாத்தாள் இருவரும் பாலசுப்பிரமணியனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனா். இதில், தம்பதியா் தாக்கியதில் பாலசுப்பிரமணியன் காயமடைந்தாா்.

அவா் அளித்த புகாரின் பேரில், சின்னதாராபுரம் போலீஸாா் பெரியசாமி, குப்பாத்தாள் மீது புதன்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.