பெரம்பலூர்

முதியவா் மா்மச் சாவு

DIN

பெரம்பலூா் அருகே உடலில் காயங்களுடன் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்த முதியவா் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டம், கழனிவாசல் தெற்குத் தெருவைச் சோ்ந்த வடிவேல் மகன் சிவசூரியன் (65). விவசாயக் கூலி வேலை செய்து வந்த இவா் செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா்.

இவரது உடலுக்கு புதன்கிழமை காலை இறுதிச்சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், முதியவரின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், மரணத்தில் மா்மம் இருப்பதாகவும் கூறி அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனா்.

இதையடுத்து நிகழ்விடம் சென்ற மங்களமேடு காவல்நிலையத்தினா், சிவசூரியன் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT