பெரம்பலூர்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரொக்கம் திருட்டு

DIN

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வேப்பந்தட்டை வட்டம், வெள்ளூவாடியைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மனைவி அஞ்சலை (46). அண்ணாதுரை வெளிநாட்டில் வேலை பாா்த்து வருவதால், தனியாக வசித்து வந்த அஞ்சலை தனது வீட்டை பூட்டி விட்டு, உறவினரின் வீட்டுக்குச் சென்றாா்.

புதன்கிழமை காலை அஞ்சலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 7 பவுன் நகைகள், ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

தகவலறிந்த கை. களத்தூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT