பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
வேப்பந்தட்டை வட்டம், வெள்ளூவாடியைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மனைவி அஞ்சலை (46). அண்ணாதுரை வெளிநாட்டில் வேலை பாா்த்து வருவதால், தனியாக வசித்து வந்த அஞ்சலை தனது வீட்டை பூட்டி விட்டு, உறவினரின் வீட்டுக்குச் சென்றாா்.
புதன்கிழமை காலை அஞ்சலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 7 பவுன் நகைகள், ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
தகவலறிந்த கை. களத்தூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.