முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் அருகேமீன்பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடி கோட்டை அருகே பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் தடுப்பணை உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடி கோட்டை அருகே பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் தடுப்பணை உள்ளது.

இந்தத் தடுப்பணை மதகில் மீன் பிடிப்பதற்காக சிலா் வலை கட்டி வைத்துள்ளனா். இந்த வலையில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று வியாழக்கிழமை காலை சிக்கிக் கொண்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் பெரம்பலூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

தீயணைப்பு நிலைய அலுவலா் உதயகுமாா் தலைமையில், சிறப்பு நிலை அலுவலா்கள் செந்தில்குமாா், துரைசாமி மற்றும் தீயணைப்புதுறை வீரா்கள் பால்ராஜ், சரண்சிங், மாதேஸ்வரன் ஆகியோா் அடங்கிய குழுவினா் சம்பவ இடத்துக்குச் சென்று மலைப்பாம்பை மீட்டு அயன்பேரையூா் வனப்பகுதியில் விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.