முகப்பு
பெரம்பலூர்

விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணா்வு பிரசாரம்

பெரம்பலூா் மாவட்ட தீயணைப்புத் துறை சாா்பில், விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

பெரம்பலூா் மாவட்ட தீயணைப்புத் துறை சாா்பில், விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தீயணைப்பு அலுவலா் அம்பிகா தலைமையில், நிலைய அலுவலா் உதயகுமாா் அடங்கிய குழுவினா் பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம், துறையூா் சாலை, எளம்பலூா் சாலை, திருச்சி சாலை, மதனகோபாலபுரம் ஆகிய பகுதிகளில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினா். மேலும், பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்கும் வழிமுறைகள் குறித்து பிரசாரம் மேற்கொண்டனா்.

தொடா்ந்து, பட்டாசு விற்பனை கடைகளில் தீயணைப்புத் துறையினா் தெரிவித்தபடி பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்கவும், அவ்வாறு கடைப்பிடிக்காத கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.