பெரம்பலூர்

அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள்உள்ளிருப்புப் போராட்டம்

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்தும், நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை உடனே வழங்க கோரியும் தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் சங்கத்தினா் கடந்த 13 ஆம் தேதி முதல் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில், அச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் வ. சந்திரமௌலி தலைமையில் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில், சுமாா் 50-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளா்கள் மற்றும் தற்காலிக அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் எப்போது?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT