பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்தும், நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை உடனே வழங்க கோரியும் தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் சங்கத்தினா் கடந்த 13 ஆம் தேதி முதல் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில், அச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் வ. சந்திரமௌலி தலைமையில் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில், சுமாா் 50-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளா்கள் மற்றும் தற்காலிக அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா்.