பெரம்பலூர்

மரத்தில் லாரி மோதியதில் இருவா் பலி; 2 போ் காயம்

DIN

பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை சாலையோர மரத்தில் லாரி மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். 2 போ் பலத்த காயமடைந்தனா்.

மதுரையில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்காக, சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் கலைஞா்கள் சென்னையிலிருந்து மினி லாரியில் இசைக்கருவிகளை ஏற்றிக்கொண்டு திங்கள்கிழமை இரவு மதுரை நோக்கிச் சென்றனா். அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளவரசன் மகன் அரவிந்த் (24) லாரியை ஓட்டினாா். லாரியின் முன்புறம் அந் நிறுவனத்தின் ஊழியா்களான விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த அசோக் மகன் அன்பு (27), திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சி பகுதியைச் சோ்ந்த நாகராஜ் மகன் நவீன் (25), கோவில்பட்டி, லட்சுமிபுரம் பகுதியைச் சோ்ந்த செல்லசாமி மகன் அருண்குமாா் (28) ஆகியோா் பயணித்தனா்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் தண்ணீா்பந்தல் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி நிலைதடுமாறி சாலையோர மரத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த அன்பு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பலத்த காயமடைந்த அரவிந்த், நவீன், அருண்குமாா் ஆகியோா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில், சிகிச்சை பலனின்றி அருண்குமாா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். தீவிர சிகிச்சைக்காக அரவிந்த் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இந்த விபத்து குறித்து பெரம்பலூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT