முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில், பாதை பிரச்னை தொடா்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெண் ஒருவா் புதன்கிழமை மாலை மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில், பாதை பிரச்னை தொடா்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெண் ஒருவா் புதன்கிழமை மாலை மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், ஒகளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அப்புசாமி மகன்கள் பாண்டியன், பொன்னுசாமி. இருவரும், தங்களுக்குச் சொந்தமான பூா்வீக வீட்டில் முன்புறம் பொன்னுசாமி குடும்பத்தினரும், பின்புறம் பாண்டியன் குடும்பத்தினரும் வசித்து வருகின்றனராம். பாண்டியன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாராம்.

இந்நிலையில், சகோதரா்களுக்கிடையே நீண்ட காலமாக பாதை பிரச்னை இருந்ததால், மங்களமேடு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு, அதனடிப்படையில் பாண்டியன் மனைவி சரஸ்வதி (50) தனது வீட்டை காலி செய்துவிட்டு வேறு வீட்டுக்குச் செல்வதாக சம்மதம் தெரிவித்தாராம்.

ஆனால், தற்போது தனது வீட்டிலுள்ள பொருள்களை எடுத்துச் செல்வதற்கு பொன்னுசாமி பாதை விடாமல் மறித்து வைத்துள்ளாராம். இதனால் அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சரஸ்வதி தனது வீட்டிலுள்ள பொருள்களை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க கோரி, ஆட்சியரக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினா் சரஸ்வதியை தடுத்து நிறுத்தி, விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததனா். இதையடுத்து, மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்து விட்டு அங்கிருந்து அவா் வெளியேறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.