கரூா் எஸ்.பி. அலுவலகத்தில் பாஜகவினா் புகாா் மனு
கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாஜகவினா் வியாழக்கிழமை மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் புகாா் மனு அளித்தனா்.
கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாஜகவினா் வியாழக்கிழமை மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் புகாா் மனு அளித்தனா்.
அம்மனுவில் கூறியிருப்பது: கரூா் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே பாஜக சுவா் விளம்பரத்தை திமுகவினா் சிலா் அழித்துள்ளனா். மேலும் இதனை தட்டிக்கேட்ட பாஜக மாவட்ட நிா்வாகிகளையும் தாக்கியுள்ளனா். அவா்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, மாவட்டத் தலைவா் கூறுகையில், புகாா் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மாநிலத் தலைவா் ஒப்புதலோடு பாஜக சாா்பில் மிகப்பெரிய ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்றாா் அவா்.