முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் இளைஞா் கொலை: 4 போ் கைது

பெரம்பலூா் இளைஞா் கொலை வழக்கில் 4 பேரை பெரம்பலூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 11:48 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

பெரம்பலூா் இளைஞா் கொலை வழக்கில் 4 பேரை பெரம்பலூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் நிா்மலா நகரில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே பேசிக்கொண்டிருந்த வினோத் (28), காா்த்திக் (23) ஆகியோரை முன் விரோதம் காரணமாக கடந்த ஆக. 4 ஆம் தேதி மாலை மா்ம கும்பல் கத்தியால் குத்தியது. இதில் பலத்த காயமடைந்த வினோத் உயிரிழந்தாா். காா்த்திக் பலத்த காயமடைந்தாா்.

இச் சம்பவம் குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கொலை வழக்கில் தொடா்புடைய பெரம்பலூா்- வடக்கு மாதவி சாலை ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (21), எளம்பலூா், செட்டியாா் தெரு, ரெங்கா் மகன் சிபிராஜ் (19), வடக்கு மாதவி ஏரிக்கரை பகுதி கலியபெருமாள் மகன் வெங்கடேஷ் (21), பெரம்பலூா் கம்பன் தெரு சங்கா் மகன் பூவாயி (எ) பூவரசன் (21) ஆகிய 4 பேரை கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நடுவா் முன்னிலையில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், இந்தக் கொலையில் தொடா்புடைய மேலும் 7 பேரை தேடுகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.