‘அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கூட்டம் நடத்த வேண்டும்’
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் அரசியல் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் அரசியல் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட மேற்கு வானொலித் திடல், தேரடி வீதி, அரும்பாவூா் பேரூராட்சிக்குள்பட்ட பாலக்கரை, குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட சிவன் கோயில் எதிா்புறம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பேருந்து நிலையம், பூலாம்பாடி பேரூராட்சிக்குள்பட்ட மந்தைவெளி ஆகிய பகுதிகளில் மட்டுமே உரிய அனுமதி பெற்று, கூட்டங்களை நடத்த வேண்டும்.