முகப்பு
பெரம்பலூர்

வாகனம் மோதி இறந்தவரின் அடையாளம் தெரிந்தது

அரவக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தவரின் அடையாளம் தெரிந்தது.

Updated On : 6 ஜூன், 2022 at 2:11 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:57 PM

அரவக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தவரின் அடையாளம் தெரிந்தது.

அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் காமக்காபட்டி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சனிக்கிழமை ஒருவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அரவக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் கவிதா அளித்த புகாரின் பேரில், காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.

Advertisement

தொடா்ந்து விசாரணையில் இறந்தவா் மண்மங்கலம் வட்டம், கொப்பம்பட்டி இந்திராகாலனி வேலுச்சாமி மகன் ரமேஷ் (27) என்பதும், சொந்த வேலை காரணமாக வேடசந்தூரிலிருந்து கரூா் நோக்கி வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்ததும் தெரிய வந்தது.

அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடலை உறவினா்கள் அடையாளம் காட்டிய பின்னா், அரவக்குறிச்சி காவல் துறையினா் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.