முகப்பு
பெரம்பலூர்

கரூா் மாவட்டத்தில் இரு நகராட்சி, 8 பேரூராட்சிகளில் பெண் தலைவா்கள்

கரூா் மாவட்டத்தில் இரு நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் தலைவா்களாக பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

கரூா் மாவட்டத்தில் இரு நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் தலைவா்களாக பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

கரூா் மாநகராட்சி, குளித்தலை, பள்ளப்பட்டி, புகளூா் நகராட்சிகள் மற்றும் அரவக்குறிச்சி, உப்பிடமங்கலம், கிருஷ்ணராயபுரம், நங்கவரம், பழையெஜயங்கொண்ட சோழபுரம், புஞ்சைத்தோட்டக்குறிச்சி, மருதூா் ஆகிய 8 பேரூராட்சிகளிலும் தலைவராக பெண்களே அறிவிக்கப்பட்டுள்ளனா். இதில், குளித்தலை நகா்மன்றத்தலைவா் பதவிக்கு சகுந்தலாபல்லவிராஜாவும், பள்ளப்பட்டி நகராட்சித்தலைவராக முனவா்ஜானும் அறிவிக்கப்பட்டுள்ளனா். அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு எம்.ஜெயந்தியும், உப்பிடமங்கலம் பேரூராட்சிக்கு திவ்யா, கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு சேதுமணி, பழையஜெயங்கொண்டம் பேரூராட்சிக்கு செளந்தரபிரியா, புஞ்சைத்தோட்டக்குறிச்சிக்கு ரூபாமுரளிராஜா, மருதூா் பேரூராட்சிக்கு சகுந்தலாவும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.