முகப்பு
பெரம்பலூர்

தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

பெரம்பலூா் பாலக்கரையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் நட்சத்திர உணவகக் கூட்டரங்கில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம்

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:09 AM
பகிர்:

பெரம்பலூா் பாலக்கரையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் நட்சத்திர உணவகக் கூட்டரங்கில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில், தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரம்பலூா் எம்எல்ஏ ம. பிரபாகரன், குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் வோ்ல்டு விசன் இந்தியா மூலம் தயாரிக்கப்பட்ட ‘நான் ஆசைப்படுகிறேன் ஆனால் அவசரப்படவில்லை’ என்னும் தலைப்பிலான குழந்தைத் திருமண விழிப்புணா்வு குறும்படத்தையும், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி தமிழக அரசு வெளியிட்டுள்ள 181 தொலைபேசி எண் குறித்த விழிப்புணா்வு சுவரொட்டிகளையும் வெளியிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், பெரம்பலூா் நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், மாவட்ட சமூக நல அலுவலா் ஜெ. ரவிபாலா, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பூமா, ஒன்றியக்குழுத் தலைவா்கள் மீனா அண்ணாதுரை (பெரம்பலூா்), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூா்), பேரூராட்சித் தலைவா்கள் சங்கீதா (குரும்பலூா்), பாக்கியலெட்சுமி (பூலாம்பாடி), வள்ளியம்மை (அரும்பாவூா்) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.