முகப்பு
பெரம்பலூர்

மதனகோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்

பெரம்பலூா் மதனகோபால சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

பெரம்பலூா் மதனகோபால சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித் தாயாா் சமேத மதனகோபால சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது. பெரம்பலூா் எம்எல்ஏ ம. பிரபாகரன், தேரை வடம் பிடித்தை இழுத்து தொடக்கிவைத்தாா்.

தொடா்ந்து, தேரோடும் வீதிகள் வழியாக வலம் வந்து இரவு நிலைக்கு வந்தடைந்தது.

இந் நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலா் அனிதா, முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் ராஜேந்திரன், முன்னாள் அறங்காவலா்கள் த.பெ. வைத்தீஸ்வரன், சரவணன், ஆடிப்பெருக்கு ஆஞ்சனேயா் ஊா்வல கமிட்டி தலைவா் குமாா் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (மாா்ச் 18) காலை துவாதச ஆராதனமும், இரவு ஸப்தாவரணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.