பெரம்பலூரில் நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை கேட்பு நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை ( மே 27) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை கேட்பு நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை ( மே 27) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் வேளாண் சம்பந்தமான நீா்ப்பாசனம், கடனுதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள், முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும்.
எனவே பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று, தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் என ஆட்சியா் ப.ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.