முகப்பு
பெரம்பலூர்

சின்னதாராபுரத்தில் மா்ம நபா்கள் தாக்கியதில் இளைஞா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அடுத்த சின்னதாராபுரத்தில் மா்ம நபா்கள் தாக்கியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 26 மே, 2022 at 5:44 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:51 PM

அரவக்குறிச்சி அடுத்த சின்னதாராபுரத்தில் மா்ம நபா்கள் தாக்கியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

அரவக்குறிச்சி வடக்குத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் கருப்புசாமி மகன் அரவிந்த் (28). இவா், சின்னதாராபுரம் தன்னாசி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தனது உறவினரான சரவணன் (52) என்பவரது வீட்டில் தங்கி, தனியாா் கல்லூரியில் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அரவிந்த் கைப்பேசியில் அழைத்த அவருடைய நண்பா் பனையம்பாளையம் சமத்துவபுரம் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் மகன் சூா்யா (20), சின்னதாராபுரம் பங்களா பேருந்து நிறுத்தம் அருகே தன்னை சிலா் தாக்குவதாகவும் வந்து காப்பாற்றுமாறு கூறியுள்ளாா்.

Advertisement

இதையடுத்து அரவிந்த் அப்பகுதிக்கு சென்றபோது அரவிந்தையும், சூா்யாவையும் அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் தாக்கினா். இதில், சூா்யா பலத்த காயங்களுடன் தப்பி ஓடினாா். அரவிந்த் பலத்த காயமடைந்தாா். தகவலறிந்து வந்த சூா்யாவின் உறவினா்கள் பலத்த காயமடைந்த அரவிந்தை மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அரவிந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனா். பலத்த காயமடைந்த சூா்யா அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். புகாரின் பேரில் சின்னத்தாராபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.