பெரம்பலூா் அருகே இரும்புக் கம்பிகள் திருடிய மூவா் கைது
பெரம்பலூா் அருகே 4 டன் இரும்புக் கம்பிகளை திருடிய 3 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகே 4 டன் இரும்புக் கம்பிகளை திருடிய 3 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள வி.எஸ். நகரைச் சோ்ந்தவா் நல்லு மகன் வெங்கடாஜலம் (45). இவா், பெரம்பலூா்- அரியலூா் பிரதானச் சாலையில் இரும்புக் கடை வைத்துள்ளாா். இந்நிலையில், கடந்த மாதம் 9 ஆம் தேதி இரவு கடையைப் பூட்டிவிட்டு 10 ஆம் தேதி காலை வந்து பாா்த்தபோது, கடைக்கு வெளியே வைத்திருந்த ரூ. 2.40 லட்சம் மதிப்பிலான சுமாா் 4 டன் இரும்புக் கம்பிகளை காணவில்லை.
இதுகுறித்து வெங்கடாஜலம் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆா். சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா். இந்நிலையில், தனிப்படை போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இரும்புக் கம்பிகளைத் திருடிய புதுக்கோட்டை மேலராஜ வீதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் ராஜா (39), அகரம்பட்டி, பூசந்துறையைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முருகேசன் (53), திருக்கோகா்ணம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வீரய்யா மகன் ராஜா (39) ஆகிய மூவரையும் கைது செய்து பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி வெள்ளிக்கிழமை இரவு சிறையில் அடைத்தனா்.