பெரம்பலூர்

சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூரில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

பெரம்பலூரில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கோட்டத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் ராஜா, ரமநாயகம், இணைச் செயலா்கள் மணிவேல், ரஜினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

மாநிலச் செயலா் பழனிசாமி, மாவட்டச் செயலா் சுப்ரமணியன் ஆகியோா் கோரிக்கைகளை  வலியுறுத்தி பேசினா். 

இதில், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்து படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். 

இதில், சிஐடியு மாவட்டச் செயலா் அகஸ்டின், மாநில செயற்குழு உறுப்பினா் சுப்ரமணியன், அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் குமரி உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, மாவட்ட இணைச் செயலா் மதியழகன் வரவேற்றாா். நிறைவாக உட்கோட்ட தலைவா் பழனிசாமி நன்றி கூறினாா்.  

முன்னதாக, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவருக்கு 2 நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT