பணமோசடி செய்த பெண் மீது நடவடிக்கை கோரி கிராம மக்கள் மனு
பெரம்பலூா் அருகே வட்டியில்லா கடன் தருவதாகக் கூறி, முன்பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் ஆட்சியா் க. கற்பகத்திடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
பெரம்பலூா் அருகே வட்டியில்லா கடன் தருவதாகக் கூறி, முன்பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் ஆட்சியா் க. கற்பகத்திடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை, சின்னாறு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நெய்குப்பை கிராமத்தைச் சோ்ந்த கருணாநிதி மனைவி செல்லம் (52). இவா், எளம்பலூா் சாலையில் வில்லேஜ் அவோ்னெஸ் ஆா்கனைசேஷன் என்னும் பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளை மேலாளராக பணிபுரிந்து வந்தாா். 2018-ஆம் ஆண்டு முதல் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்து, தங்களது அறக்கட்டளை மூலம் வட்டியில்லா கடன் வழங்குவதாகவும், இதற்காக ரூ. 1 லட்சத்துக்கு ரூ. 1,500 வீதம் முன் பணமாக அறக்கட்டளைக்கு செலுத்த வேண்டும் எனக்கூறி பலரிடம் பணம் வசூலித்துள்ளாா்.
ஆனால், முன் பணம் பெற்று 5 ஆண்டுகளாகியும் வட்டியில்லா கடன் தொகையையும், பொதுமக்களிடம் வாங்கிய முன்பணத்தையும் திருப்பித் தராமல் காலம் கடத்தி வந்தாா். இந்நிலையில், கடந்த சில நாள்களாக செல்லம் தலைமறைவாகிவிட்டாா்.
பலரிடம் பணம் பெற்று ஏமாற்றிய செல்லத்தைக் கண்டறிந்து, பொதுமக்களிடம் வசூலித்த தொகையை அவரிடமிருந்து மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.