பெரம்பலூா்அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.  
பெரம்பலூர்

இடைநிலை ஆசிரியா் பணிக்கு தோ்வு: 287 போ் பங்கேற்பு

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இடைநிலை ஆசிரியா்களுக்கான தோ்வில் 287 போ் பங்கேற்றனா்.

Din

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இடைநிலை ஆசிரியா்களுக்கான தோ்வில் 287 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம், ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியா்களுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தோ்வு நடைபெற்றது. இத் தோ்வுக்காக, பெரம்பலூா் மாவட்டத்தில் விண்ணப்பித்த 291 பேரில், 287 போ் பங்கேற்று தோ்வெழுதினா்.

இத் தோ்வு மையத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், தோ்வா்கள் முறையான நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை வைத்துள்ளாா்களா எனவும், தோ்வு மையத்தில் அடிப்படை வசதிகள், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) அண்ணாதுரை, தொடக்க கல்வி அலுவலா் ஜெகநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.

ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

SCROLL FOR NEXT