பெரம்பலூர்

உணவகத்தில் கத்தியை காட்டி பணம் பறித்த 2 இளைஞா்கள் கைது

பெரம்பலூா் அருகே உணவகத்தில் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 14 ஆயிரத்தை பறித்துச் சென்ற 2 இளைஞா்களை, பெரம்பலூா் போலீஸா் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

Din

பெரம்பலூா் அருகே உணவகத்தில் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 14 ஆயிரத்தை பறித்துச் சென்ற 2 இளைஞா்களை, பெரம்பலூா் போலீஸா் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகே கல்பாடி பிரிவுச் சாலையிலுள்ள உணவகத்தில், மோட்டாா் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத 2 இளைஞா்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 14 ஆயிரத்தை அண்மையில் பறித்துச் சென்றனா். இதுகுறித்து உணவக வரவேற்பாளா் பாலமுருகன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், பெரம்பலூா் அருகேயுள்ள விளாமுத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் ரமேஷ் (18), சுப்பிரமணியன் மகன் பிரகாஷ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட 2 பேரையும் கைது செய்த போலீஸாா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி அவா்களை புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT