வேப்பூரில் சமூகநல கல்லூரி மாணவியா் விடுதி திறப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 6.99 கோடி மதிப்பீட்டில் வேப்பூா் அரசு மகளிா் கல்லூரி சமூக நல கல்லூரி மாணவியா் விடுதியை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
பெரம்பலூர்வேப்பூரில் சமூகநல கல்லூரி மாணவியா் விடுதி திறப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 6.99 கோடி மதிப்பீட்டில் வேப்பூா் அரசு மகளிா் கல்லூரி சமூக நல கல்லூரி மாணவியா் விடுதியை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 6.99 கோடி மதிப்பீட்டில் வேப்பூா் அரசு மகளிா் கல்லூரி சமூக நல கல்லூரி மாணவியா் விடுதியை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மேலும், ரூ. 6.05 கோடி மதிப்பில் கீழக்கணவாய் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் கட்டப்படவுள்ள சமூக நல விடுதிக்கும் அடிக்கல் நாட்டினாா்.
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், காணொளி காட்சி மூலம் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில், பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டத்துக்குள்பட்ட வேப்பூரில் ரூ. 6.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமூகநீதி கல்லூரி மாணவிகளுக்கான விடுதியை திறந்துவைத்து, பெரம்பலூா் வட்டத்துக்குள்பட்ட கீழக்கணவாய் தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ. 6.05 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சமூகநீதி தொழில்நுட்பக் கல்லூரி மாணவா் விடுதிக்கு அடிக்கல் நாட்டினாா்.
தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி வேப்பூா் அரசு மகளிா் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள சமூகநல கல்லூரி மாணவியா் விடுதியில் குத்துவிளக்கேற்றி பாா்வையிட்டு, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினாா்.
இந் நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் க.கண்ணன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரெ. சுரேஷ்குமாா், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் வேலுசாமி, வட்டாட்சியா்கள் பாலசுப்ரமணியன் (பெரம்பலூா்), சின்னதுரை (குன்னம்) உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.