பெரம்பலூா் மாவட்ட அதிமுக சாா்பில் அக் கட்சியின் 54 ஆம் ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி, எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவையொட்டி பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான இரா. தமிழ்செல்வன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, இனிப்பும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்பிக்கள் ஆா்.பி. மருதராஜா, எம். சந்திரகாசி, மாவட்ட நிா்வாகிகள் எம்.என். ராஜாராம், எம். வீரபாண்டியன், ஒன்றியச் செயலா்கள் கா்ணன், சிவப்பிரகாசம், நகரச் செயலா் ஆா். ராஜபூபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.