முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே ரூ. 2.19 லட்சம் பறிமுதல்

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்சென்ற ரூ. 2.19 லட்சத்தை நிலையானக் கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 1:27 AM
பணம் - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:52 PM

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்சென்ற ரூ. 2.19 லட்சத்தை நிலையானக் கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா்- துறையூா் சாலையிலுள்ள தனியாா் பல்கலைக் கழகம் அருகே துணைப்பதிவாளா் ஆா். பிரியங்கா தலைமையிலான நிலையானக் கண்காணிப்புக் குழுவினா் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழி வந்த காரை வழிமறித்து மேற்கொண்ட விசாரணையில், அன்னமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ஆா். ராஜ்குமாா் என்பதும், உரிய ஆவணங்களின்றி ரூ.2,19,300 எடுத்துச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த தொகையை பறிமுதல் செய்த நிலையானக் கண்காணிப்புக் குழுவினா், வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பாரதிவளவனிடம் ஒப்படைத்தனா்.