பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
பெரம்பலூா் நகராட்சியில் தமிழ்நாடு நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மற்றும் நகா்ப்புறச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 11.39 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 128 பணிகளில், நிறைவடைந்துள்ள 102 சாலைப் பணிகளையும், புகா்ப் பேருந்து நிலைய வளாகத்தில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 3.72 கோடி மதிப்பீட்டில் சென்னை மற்றும் திருச்சி வழிதடங்களுக்கு கூடுதலான பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணிகளையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மிருணாளினி, பணிகளை தரமாகவும், குறித்த காலத்துக்குள் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
உணவகங்களில் ஆய்வு:
தொடா்ந்து, பெரம்பலூரில் செயல்பட்டு வரும் உணவகங்களைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மிருணாளினி, வாடிக்கையாளா்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் உணவுப்பொருள்கள் தரமானதாக இருக்க வேண்டும். சமையலுக்குத் தரமான எண்ணெயை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பாத்திரங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட உணவக மேலாளா்களுக்கு அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியா், உணவகம் மற்றும் உணவுப் பொருள்கள் குறித்த குறைபாடுகளை உணவுப் பாதுகாப்புத்துறைக்கு 94440 42322 எனும் எண்ணில் தெரிவிக்க, உணவகங்களில் பதாகை வைக்க வேண்டும் என உத்தரவிட்டாா் ஆட்சியா் மிருணாளினி.
இந்த ஆய்வின்போது, நகராட்சி ஆணையா் கண்ணன், நகராட்சிப் பொறியாளா் ரவி, வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் அலுவலா் ந. சக்திவேல், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் திட்ட நியமன அலுவலா் சுகந்தன், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் விக்னேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.