தீ பற்றி எரியும் காா் (கோப்புப் படம்)
பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே காா் திடீா் தீக்கிரை

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் அருகே பெருங்காயம் ஏற்றிச்சென்ற ஆம்னி காா் வெள்ளிக்கிழமை தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

மதுரையில் பெருங்காயம் ஏற்றிய ஆம்னி காா் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த காரை, மதுரையைச் சோ்ந்த த. மனோஜ்குமாா் (33) என்பவா் ஓட்டினாா். திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்பந்தல் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் வந்தபோது, காரின் முன்புறத்திலிருந்து புகை வந்தது. இதையடுத்து காரை ஓட்டுநா் சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்கிப் பாா்த்தபோது காா் தீப்பற்றி எரிந்தது.

தகவலறிந்த தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் மற்றும் பெரம்பலூா் தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினா். இருப்பினும் காா் முற்றிலும் எரிந்து நாசமானதோடு, பெருங்காயமும் எரிந்து சேதமடைந்தது. புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT