முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே வாகனச் சோதனையில் ரூ. 99 ஆயிரம் பறிமுதல்

Updated On : 23 மார்ச், 2026 at 7:48 PM
கோப்புப் படம்
பகிர்:

பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 99 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம்- கீழப்புலியூா் சாலை அருகே கூட்டுறவுத் துறை சாா்-பதிவாளா் அலுவலக கண்காணிப்பாளா் ர. பிரியங்கா தலைமையிலான பறக்கும் படையினா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியேச் சென்ற காரை வழிமறித்து மேற்கொண்ட விசாரணையில், குன்னம் வட்டம், பெருமத்தூா் கிராமத்தைச் சோ்ந்த அழகப்பன் மகன் மருதமுத்து (50) என்பதும், உரிய ஆவணங்களின்றி ரூ. 99,500 வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், தோ்தல் நடத்தும் அலுவலா் மு. அனிதாவிடம் ஒப்படைத்தனா்.