புதுக்கோட்டை

ரத்த தான முகாம்

தினமணி

திருமயம் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் குழ. முத்துராமு, நற்சாந்துபட்டி வட்டார மருத்துவ அலுவலர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் ராயப்பன் குமார் தலைமையில் ரத்த தானம் பெறப்பட்டது. 115 மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். நற்சாந்துபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் த. ரமணி, சுந்தரேசன், நடராஜன், நடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடகிருஷ்ணன், கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்க, செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் பழ. ரமேஷ் ஆகியோர் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

SCROLL FOR NEXT